இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது தொற்று நோயாளர் தொகை மெல்ல-மெல்லக் குறைந்து வருகிறது.
தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக அண்மைய நாட்களில் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 529 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் 3 ஆயிரத்துக்கும் அதிகமாகவே பதிவாகி வருகின்றன. நேற்று 3,380 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 86 இலட்சத்து 94 ஆயிரத்து 979-ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மொத்த கொரோனா மரணங்களும் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 82 ஆக உயர்ந்துள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 15 இலட்சத்து 55 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 22 கோடியே 78 இலட்சத்து 60 ஆயிரத்து 317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா